தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – இன்று முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு உள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து இன்று அதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவலை தடுக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மீண்டும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக்கல்வியில் அதிகளவு நாட்டம் இல்லாத காரணத்தால் பலரும் படிப்பை துறந்து வேலைக்கு செல்ல தொடங்கி விட்டனர். இதனால் இடைநிற்றல் விகிதம் அதிகரித்தது. எனவே அரசு மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கொரோனா தொற்றை தடுப்பதில் மும்முரம் காட்டிய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியது. இதனால் கொரோனா தாக்கம் வெகுவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தேர்வு இல்லாமல் தமிழக சமூக பாதுகாப்பு துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
பிற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் செப்.1ம் தேதி நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனையடுத்து சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் குறிப்பிட்ட பள்ளிகள் மட்டும் மூடப்பட்டு, பிற பள்ளிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தியது.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை!
இது தொடர்பான அறிக்கையும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து இன்று அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். அதன் பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவினை முதல்வர் அறிவிப்பார் என கூறப்படுகிறது. ஏற்கனவே தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.