தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா 3ம் அலைத்தொற்று பரவலுக்கு மத்தியில் மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 லிருந்து 12 வரையுள்ள வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா பேரலைத்தொற்று தாக்கத்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பல்வேறு சூழ்நிலைகளுக்குள்ளாக கடந்து சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக அலுவலக வேலை முறை, கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளில் பெரும் மாற்றங்களை சந்தித்திருக்கிறது. இதில் கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை, மாணவர்களின் எதிர்கால கல்வி கொரோனாவால் முடக்கப்பட்டு விடாத வகையில் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் அவ்வப்போது ஏற்படும் கொரோனா வைரஸின் வீழ்ச்சிக்கு மத்தியில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் நேரடி முறையில் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா முதலாம் அலை மற்றும் 2ம் அலைக்கு மத்தியில், கடந்த 2 ஆண்டுகளில் ஒரு சில மாதங்களில் மட்டுமே பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது. அதே போல இந்த 2022ம் ஆண்டின் துவக்கத்தில் உருவான கொரோனா 3ம் அலையால் கடந்த ஒரு சில வாரங்களாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!

மாணவர்களுக்கு வழக்கம் போல ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் கொரோனா தினசரி பாதிப்புகள் சரிவை கண்டு வரும் நிலையில், ஊரடங்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜன.27) ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு ரத்து உட்பட பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பு – அமைச்சரவை முடிவு!

இந்த கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வரும் பிப்ரவரி மாதத்தில் 10 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று தகவல் அளித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 1 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது தெரிவித்திருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!