தமிழகத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி 35 ஆயிரம் வரை அதிகபட்சமாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகளும் வழங்கப்பட்டன. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டது. இந்த நடவடிக்கைகளினால் மாநிலத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பியது. எனவே அனைத்து தொழில் துறைகளும் முழுவீச்சில் செயல்பட தொடங்கி உள்ளன. இருப்பினும் கொரோனா 3வது அலையை கருத்தில் கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!
அதன்படி உரிய வழிகாட்டுதல்களுடன் செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிக்கு வருகை புரிந்த சில மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் குறிப்பிட்ட பள்ளிகள் மட்டும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பிற இடங்களில் வகுப்புகள் வழக்கம் போல வாரத்திற்கு 6 நாட்கள் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்புகளில் கலந்து கொள்வதை காண முடிகிறது.
SBI 5121 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு
எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக தொடக்க, நடுநிலை பள்ளிகளை (1 முதல் 8ம் வகுப்பு வரை) திறப்பது குறித்த அறிக்கை முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அவர் கூறுகையில், தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து இம்மாத இறுதியில் முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பார் என தெரிவித்து உள்ளார்.