தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!

0
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக பெற்றோர்கள் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தொட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மீண்டும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழி பாடங்கள் எடுக்கப்பட்டது. மேலும் மே மாதம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பரவல் ஓரளவு குறைந்தது. கொரோனா தடுப்பூசியும் தகுதி உடையோருக்கு விரைவாக செலுத்தப்பட்டு வருகிறது. மறுபுறம் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளினால் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதனால் செப்.1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.

‘குலாப்’ புயல் இன்று மாலை கரையை கடக்கும் – 2 மாநிலங்களுக்கு ஆபத்து! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் குறிப்பிட்ட பள்ளிகள் மட்டும் சில நாட்களுக்கு மூடப்பட்டு பிற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. இதனால் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக நடுநிலை பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரப்பட்டது.

பொதுத்துறை வங்கியில் வேலை – ரூ.15,000/- சம்பளம் | அப்ளை பண்ணுங்க !

இது தொடர்பான அறிக்கையும் முதல்வரிடம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி இம்மாத இறுதியில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பின் போது முதல்வர் பள்ளிகள் திறப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பார் என கூறப்படுகிறது. மாணவர்களும் பல மாதங்களாக நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாத காரணத்தால் படிப்பின் மீது ஆர்வம் குறைந்து விட்டதாக பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் உரிய விதிமுறைகளை பின்பற்றி விரைவில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!