தமிழகத்தில் 1 முதல் 10 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது ? – முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் விடுமுறையில் உள்ள பள்ளிகள் அனைத்தும் விரைவில் திறக்கப்படவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் மூலம் தகவல்களை வெளியாகின்றன.
பள்ளிகள் திறப்பு :
கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வி ஆண்டுகள் தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று கொண்டு உள்ளன. இருந்தாலும் இன்னும் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மத்திய அரசு 21 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து இருந்தாலும் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. நாடு முழுவதும் வணிகம், போக்குவரத்து, சுற்றுலா, தொழில்துறையின் அனைத்தும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்கியுள்ளது. அண்டை மாநிலங்களிலும் பள்ளிகள் தீர்ப்பிற்கு ஆயத்த பணிகள் செல்வதால் தமிழக அரசும் அது குறித்து ஆலோசித்து வருகிறது.
ஆன்லைன் வகுப்புகள் :
தமிழகத்தில் வரும் செப் 21 முதல் 5 நாட்களுக்கு மாணவர்களுக்கு காலாண்டு விடுறையாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதன் பிறகு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றே அறிவிக்கப்பட்டு உள்ளது.
விரைவில் பள்ளிக்க திறப்பு :
தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கும், அதனை தொடர்ந்து படிப்படியாக மற்ற மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. எனவே விரைவில் பள்ளிகள் திறப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்