செப்டம்பரில் பள்ளிகள் திறப்பா ?? – மத்திய அரசு கடிதம்
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் இன்னும் ஊரடங்கானது அமலில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. எனவே அடுத்த கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதனால் அது குறித்து நடவடிக்கை எடுக்க அரசும் ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு செய்தியினை வெளியிட்டு உள்ளார். அதில், பள்ளிகளை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்கலாமா என பெற்றோர்களிடம் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாக அறிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாவே உள்ளதாகவும், அதன் தாக்கம் குறையும் பொழுது தான் பெற்றோர்களிடம் கருத்து கேட்டறிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் பள்ளிகள் திறக்கப்படாததால் 14 தொலைக்காட்சிகள் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் பணி முடிவடைந்ததும், வகுப்புகள் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |