தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை – அமைச்சர் அறிவிப்பு !

1
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை – அமைச்சர் அறிவிப்பு

உயர்நீதிமன்றம், தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என அரசு பதிலளிக்க உத்தரவிட்டவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் கல்லூரிகளைக மூடிய அரசு தற்போது பல்வேறு தரப்பு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. எனினும் இன்னும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பிற்கு மட்டும் அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.

பள்ளிகள் எப்போது என்ற கேள்விகளுக்கு “பள்ளிகள் திறப்பை விட மாணவா்களின் உயிா்தான் முக்கியம். பள்ளிகளைத் திறப்பதற்கான நேரம் இதுவல்ல. பள்ளிகள் திறப்பு தொடா்பாக சுகாதாரத்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறையுடன் ஆலோசித்த பின்னா் முதல்வா் முடிவெடுப்பார்” என அமைச்சர் கூறியிருந்தார்.

வேலைவாய்ப்பு செய்திகள்

மேலும் அவர், “அதற்கு முன்பாக உள்ளாட்சித்துறையின் உதவியுடன் எட்டு மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். எதிா்காலத்தில் வடிவமைக்கப்பட உள்ள வினாத்தாளைக் கருத்தில் கொண்டே பாடங்கள் குறைக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

எனவே தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை எனவும் கொரானா ஓரளவிற்கு முழுமையாக குறித்த பின்னரே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் பதில் அளித்துள்ளார். இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. இந்த கல்வியாண்டில் திறப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.
    அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!