தமிழகத்தில் அக்டோபர் 5 முதல் பள்ளிகள் திறப்பா ?!
தமிழகத்தில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தேவையான ஆயத்த பணிகளை தமிழக அரசு மேற்கொள்வதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் மட்டும் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதனால் அது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
பள்ளிகள் திறப்பு :
கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வி ஆண்டுகள் தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று கொண்டு உள்ளன. இருந்தாலும் இன்னும் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மத்திய அரசு 21 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து இருந்தாலும் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. நாடு முழுவதும் வணிகம், போக்குவரத்து, சுற்றுலா, தொழில்துறையின் அனைத்தும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்கியுள்ளது. அண்டை மாநிலங்களிலும் பள்ளிகள் தீர்ப்பிற்கு ஆயத்த பணிகள் செல்வதால் தமிழக அரசும் அது குறித்து ஆலோசித்து வருகிறது.
காலாண்டு விடுமுறை :
தமிழகத்தில் வரும் செப் 21 முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதனை மாணவர்களுக்கு காலாண்டு விடுறையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களின் மன அழுத்தம் குறையும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.
அக்டோபர் 5ல் பள்ளிகள் திறப்பு !
இதனால் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் முதற் கட்டமாக 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்க தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கினை மத்திய அரசின் பரிந்துரைகள் மற்றும்வழிமுறையோர்கள் அடிப்படையில் தளர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்