தமிழக பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 13) விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகத்தில், ஊட்டி, மஞ்சூர், அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர்மழை:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும். இந்த வருடம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நேரத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெயிலே அடிக்கவில்லை.மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதால் கடும் குளிர் நிலவுகிறது.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இனி சனிக்கிழமைதோறும் வகுப்புகள்!
இதற்கு இடையே நாள் முழுவதும் சாரல் மலையும் அவ்வப்போது லேசாக கனமழையும் பெய்து வருகிறது. மேலும் ஊட்டி, மஞ்சூர், அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அப்பர் பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் சராசரியாக 5 சென்டி மீட்டர் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்களின் கடும் அவதி அடைந்துள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு வரும் பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி வெளியே வருகின்றனர்.
மேலும் தொடர் மழை காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆங்காங்கே சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே கனமழை ஏற்பட்டால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், 456 நிவாரண முகாம்கள் தயாராக இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.