தமிழக பள்ளிகளில் 624 தற்காலிக பணியிடங்கள் – ஏப்ரல் முதல் ஊதியம் நீட்டிப்பு!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 624 தற்காலிக பணியிடங்களுக்கான ஊதிய நீட்டிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
ஊதிய நீட்டிப்பு:
நாடு முழுவதும் பேரலையாக உருவாகியுள்ள கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று வரை கொரோனா தாக்கம் குறையாத பட்சத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்க முடியாத சூழல் காணப்படுகிறது.
VOC துறைமுகத்தில் வேலை 2021 – மாத ஊதியம்: ரூ.2,60,000
அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி ஆல்பாஸ் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போதுள்ள சூழலில் தேர்வுகள் நடத்த முடியாததால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 624 தற்காலிக பணியிடங்களுக்கான ஊதிய அளவை நீட்டிப்பதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழக பள்ளிகளில் 624 தற்காலிக பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.