3 நாட்களில் பாடத்திட்டம் குறைப்பு அட்டவணை வெளியீடு !! – அப்போ ஸ்கூல் திறக்க போறாங்களா ??
தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது குறித்த அட்டவணை விரைவில் 3 நாட்களில் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். அது குறித்த தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
பொது முடக்கம் !
நாடு முழுவதிலும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடங்கள் குறைப்பு !!
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் மாணவர்களின் சுமையினை குறைக்க அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் 50% வரை குறைக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த குறைப்பு குறித்த அட்டவணை இன்னும் 3 நாட்களில் வெளியிடப்படும் எனவும் அவர் அறிவித்து உள்ளார். பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வினை நடத்திக் கொள்ளலாம்
CBSE வாரியம் இறுதியாண்டு தேர்வு நடத்துவது குறித்து தீர்மானித்துள்ளது, என்றாலும் தமிழகத்தில் இது குறித்து பிறகு தான் முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்