தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து அறிக்கை – விரைவில் அரசாணை !!
தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து திங்கள்கிழமை முதல்வரிடம் அறிக்கை தரப்படும் எனவும் அடுத்த 5 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள்
பள்ளிகள் திறப்பு ?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தொற்றின் தாக்கம் தனியாத வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டு உள்ளது. இதனால் அடுத்த வருடத்தில் தான் பள்ளிகள் திறக்கப்படும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.
பாடத்திட்டங்கள் குறைப்பு !!
இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிரமங்களை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்களை கணிசமான சதவீதத்தில் குறைக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின் படி ஏற்கனவே 40% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
தற்போது அது குறித்த முழுமையான அறிக்கையினை நிபுணர் குழு திங்கள் கிழமை முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும், அதற்கடுத்த 5 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது தெரிவித்து உள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்