தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் – ஏப்ரல் 15க்குள் முடிக்க உத்தரவு!!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் அனைத்து பாடத்திட்டங்களையும் நடத்தி முடிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பாடத்திட்டங்கள் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பிற வகுப்புளுக்கு தனியார் பள்ளிகள் சார்பில் ஆன்லைன் வாயிலாகவும், அரசு பள்ளிகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக கல்வித்துறை செயலாளர் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் முக்கிய அறிவிப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
பயணிகள் சேவையில் மதுரை விமான நிலையம் 2ம் இடம் – ஆய்வு முடிவுகள்!!
அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி நடப்பு கல்வியாண்டில் 40 சதவீதம் அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. அதனை பின்பற்றி வகுப்புகள் எடுக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தற்போது வரை ஆன்லைன் முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு தற்போது நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பின்னரே வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்