தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 13 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை!
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை விரைவில் நடத்தி முடிக்க ஆசிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாணவர்களும் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோடை விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா மூன்று அலைகளுக்கு பின்னர் ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த நவம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அது போல் 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்த முறை 12, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்வி பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத தவணைக்கான DA நிலுவைத்தொகை? புதிய சிக்கல்!
பொதுவாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு தேர்வுகளும் பிற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெறுவது வழக்கம். ஆனால் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால் பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதி தேர்வுகள் மே இறுதி வரை நடைபெறுகிறது. இதனால் மாணவர்களுக்கான கோடை விடுமுறை இந்த கல்வியாண்டில் குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 47 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பாசிரியர் என்ற விருதுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டதால், பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கு முழு பாடங்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை தவிர்த்து மீதம் உள்ள நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேடக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு படி தான் பொதுத்தேர்வில் கேள்விகள் இடம்பெறும் என தெரிவித்தார். மேலும் கோடை காலத்தில் பள்ளி நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் குறைந்தது சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்து உள்ளதாக கூறினார். இதை அடுத்து நடப்பு ஆண்டு மே மாதம் 10 அல்லது 13 நாட்கள் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். அடுத்த ஆண்டில் வழக்கம் போல ஒன்றரை மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும் என தெரிவித்தார். இறுதியாக, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் கூறினார்.