தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு நேரம் குறைப்பு – அமைச்சர் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்!
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாலை 3.30 மணிக்குள் வகுப்புகளை முடித்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேரம் குறைப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் வெகு நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் அவர்களின் மன அழுத்தத்தை போக்க கூடிய வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலையுடன் ஜெயலலிதா பல்கலை இணைப்பு – அதிமுக எதிர்ப்பு!
மேலும் மாணவர்களுக்கு முதல் மூன்று வாரங்களுக்கு அடிப்படை இணைப்பு பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 1 முதல் 15ம் தேதி வரை தூய்மையான நிகழ்வுகள்-2021 என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க தேவையான முன்னேற்பாடுகளை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் விரைவாக செய்து வருகிறது. இந்த நிலையில் தினசரி பாட வகுப்புகளை மாலை 3.30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன் படி காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். மேலும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தினசரி 5 வகுப்புகள் மட்டுமே நடைபெறும். வாரத்தின் 6 நாட்களும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். விளையாட்டு நேரம் கிடையாது. மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும். பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.