தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு இது நேரமல்ல – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் !!
கொரோனா பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் 16 தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்பட முடியாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுமதித்தது. தமிழக அரசும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்கு பெற்றோர்களின் அனுமதியுடன் விருப்பத்தின் பேரில் வரலாம் என அறிவித்தது. ஆனால் உடனடியாக அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்தது.
பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது :
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்விக்கு பதில் அளிக்க இது நேரமல்ல, கொரானா நோய் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் பள்ளிகள் குறித்த முடிவு ஆலோசிக்கப்படும். ஏனென்றால் தொற்று நோய் மாணவர்கள் மத்தியில் பரவி விட்டால் கட்டுக்குள் கொண்டுவருவது மிகவும் கடினம், அதோடு மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தோன்றும் காலம் நெருங்கிவிட்டது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்தால் மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்படும் எனவே தற்போதைய நிலையில் பள்ளி திறப்பு குறித்து சிந்திக்க இயலாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்