அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு ??? -அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து எங்கள் வலைத்தளத்தில் காணலாம்.
கொரோனா ஊரடங்கு :
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்வில்லா தேர்ச்சி வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் டிவி வாயிலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தும் தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்ற நிலையே நீடிக்கிறது.
அக்டோபர் 5ல் பள்ளிகள் திறப்பு ??
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது இன்னும் அக்டோபர் 5ல் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்