பள்ளிகளின் டெக்னிக்கல் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் ! – அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு டெக்னிக்கல் பிரிவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அறிவித்து உள்ளார்.
தமிழக பள்ளிகள் திறப்பு !
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு தற்போது சாத்தியம் இல்லை என்றும், அதற்கான சாத்தியக்கூறுகள் அமையவில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதனால் தமிழக பள்ளிகள் திறப்பானது மேலும் தாமதப்படும்.
பணியிடங்கள் நிரப்பப்படும் !
தனியார் பள்ளிகளில் கட்டணம் முழுமையாக வசூலிக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 15.3 லட்சம் மாணவர்கள் இதுவரை அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் அறிவித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு டெக்னிக்கல் பிரிவு காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அவர் உறுதி கூறினார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Good. Opportunity,