தமிழக பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து அதன் பிறகு முதல்வர் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு :
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 9 முதல் 12 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 14ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒரு எபிசோடுக்கு விஜய் சேதுபதிக்கு வழங்கப்படும் சம்பளம்! – போதுமா சார்?
இந்த ஆலோசனையில் முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளார். அதனை தொடர்ந்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய அறிவிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
செப்.17 முதல் ‘இந்த’ மாவட்டத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ஆட்சியர் உத்தரவு!
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்த அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து அதன் பிறகு முதல்வர் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தைகளை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் காலகட்டம் இதுவல்ல. குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு வர யாரும் வற்புறுத்த வேண்டாம். ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு இதுவரை 148 மாணவர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.