பள்ளிகள் திறப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி !!! – அமைச்சர் விளக்கம்

0
பள்ளிகள் திறப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி !!! - அமைச்சர் விளக்கம்
பள்ளிகள் திறப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி !!! - அமைச்சர் விளக்கம்

பள்ளிகள் திறப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி !!! – அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு எப்போது என்பதனை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா எதிரொலி :

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டும் ஆன்லைன் மற்றும் டிவி வாயிலாக நடைபெற்று வருகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

செப்டம்பர் 21ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அண்டை மாநிலங்கள் அது குறித்த ஆலோசனையில் உள்ளனர். எனினும் தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்றாலும் அது குறித்த வதந்திகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி !

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை எனவும், மேலும் அது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை 13 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!