தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – அரசின் அதிகாரபூர்வ முடிவு
கொரோனா பரவலினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள், வருகைப் பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் தனித்தேர்வர்களுக்கு தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கான தேர்வும் தாமதமாக்கப்பட்டுள்ளது.
மேலும் பதினொன்றாம் வகுப்பு, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் சேர்க்கை தொடங்கி நடைபெற்றுவருவதால் தனித் தேர்வர்கள் அதில் கலந்துகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தனித் தேர்வர்களிடம் பாரபட்சம் காட்டப்படுவதால் ஒரு ஆண்டு காலத்தை இழக்க நேரிடும் என்பதால் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இதற்கு, தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்தி முடிவு இரு வாரங்களில் வெளியிடப்படும் என்று அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என மக்கள் தொடர்ந்து எதிர்பார்த்துவரும் நிலையில் அரசு இதுகுறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
TN.panchayat.
Office.Asst.post
Website.details
Post.details.address