தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா ? – பெற்றோர்களிடம் கருத்து கேட்பு !!!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என்று தெரியவரும் என்பதனால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஊரடங்கு உத்தரவு !
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
பெற்றோர்கள் கருத்து !
இவை அனைத்தையும் சரி செய்ய பள்ளிகளை வரும் 16ம் தேதி முதல் திறக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது பெற்றோர்களிடம் கருத்து கேட்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெற்றோர்களின் கருத்துக்களை பொறுத்தே பள்ளிகள் திறக்கப்படுமா என்பது தெரியவரும்.
கொரோனா தொற்றின் தீவிரம் சற்று தணிந்துள்ளது என்றாலும் பெற்றோர்கள் பள்ளிகளை தாமதமாகவே திறக்கலாம் என்று கூறுவதாகவே செய்திகள் வெளியாகின்றன. எனவே இன்று நடைபெற்று கொண்டுள்ள கருத்து கேட்பு கூட்டம் முடிந்தவுடன் தான் பள்ளிகள் திறப்பு குறித்து தகவல்கள் அறிய முடியும்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |