தமிழகத்தில் ஜனவரியில் பள்ளிகள் திறப்பு !! – பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு !!!!
தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பள்ளிகளை திறக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு இருப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
கொரோனா பொதுமுடக்கம் :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைவர் மத்தியிலும் பள்ளிகள் திறப்பு எப்போது சாத்தியமாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்தது.
பள்ளிகள் திறப்பு !!!
மத்திய அரசு வழங்கிய பல்வேறு தளர்வுகளின் படி தமிழகத்தில் வரும் நவம்பர் 16ம் நாள் முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவு வழங்கியது. ஆனால் அதற்கு பெற்றோர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போடப்பட்டது. இவ்வாறு சென்றால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதனால் விரைவில் பள்ளிகள் திறக்க வேண்டும் என கல்வியாளர்கள் சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 2021ம் வருடம் ஜனவரி மாதம் பள்ளிகளை திறக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவிக்கிறது. அதுவரை மாணவர்கள் ஆன்லைனிலேயே கல்வி கற்று வருவர் என தெரிவதால் இந்த வருடத்தில் பள்ளிகள் திறப்பிற்கு வாய்ப்பியில்லை என்பது உறுதியாகிறது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்