பெற்றோரின் மனநிலை பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் – முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் மாணவர்களின் பெற்றோரின் மனநிலை பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தனது உரையில் அறிவித்து உள்ளார். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் அரியர் தேர்வுகள் குறித்தும் உரை நிகழ்த்தினார்.
பள்ளிகள் திறப்பு :
கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வி ஆண்டுகள் தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று கொண்டு உள்ளன. இருந்தாலும் இன்னும் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
வேலைவாய்ப்பு செய்திகள்
மத்திய அரசு 21 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து இருந்தாலும் தமிழகத்தில் பெற்றோர்களின் மனநிலையினை அறிந்து அதன் பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என முதலவர் அறிவித்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு மற்றும் அறியர் தேர்வுகள் :
தமிழகத்தில் அரியர் தேர்வுகள் விவகாரத்தில் யுஜிசி விதிமுறை படியே அரசு செயல்பட்டுள்ளது என்றும், விதிமுறைகளுக்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை என்றும், அவர் தெரிவித்து இருந்தார். மேலும் ஆசிரியர் தேர்வில் 2013ல் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி பணிக்கு செல்லலாம் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்