ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டித்து தேர்வு துறை உத்தரவு !!!!
மேல்நிலை கல்வி பயிலும் 11 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கதங்களின் அக மதிப்பீட்டு மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் 11 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை தேர்வு துறைக்கு இணையதளத்தின் மூலம் 10.03.2020 ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் செய்முறை தேர்வு 12.02.2020 தேதி முதல் 27.02.2020 தேதி வரை நடந்து முடிந்த நிலையில் மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களின் செய்முறை தேர்வு 17.02.2020 தேதி முதல் 27.02.2020 தேதி வரை நடந்து முடிந்த நிலையில் மாணவர்களின் செய்முறை தேர்வு மதிப்பெண்களை முதன்மை கல்வி அலுவலகங்களின் மூலம் இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்யும் வேண்டும் என 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கப்பட அகமதிப்பீட்டு மதிப்பெண்களை சம்மந்தப்பட்ட பள்ளிகளின் மூலம் இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சில மாவட்டங்களின் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அக மதிப்பீடு மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வுக்கான மதிபெண்கள் இன்னும் பதிவேற்றம் செய்யவில்லை என கருதப்படுகிறது.
எனவே இன்னும் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யாமல் இருக்கும் அக மதிப்பீடு மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வுக்கான மதிபெண்களை 05.03.2020 தேதி முதல் 10.03.2020 தேதிக்குள் இணையதளத்தின் மூலம் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட அரசுத் தேர்வு உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெறப்பட்ட 11 ம் வகுப்பு மறுகூட்டல்(Arrear) தேர்வர்களின் செய்முறை தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்களை 06.03.2020 ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |