தமிழகத்தில் நாளை (டிச.06) பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நாளை (டிச.06) மகா கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் அண்ணாமலையார் திருக்கோயிலில் நடப்பு ஆண்டுக்கான மகா கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம் நாளை(டிச.06) ஏற்றப்பட உள்ளது. காலை 4 மணி அளவில் திருவண்ணாமலை சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெறும்.
Follow our Instagram for more Latest Updates
இந்த சிறப்பான விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவர். இதனை அடுத்து பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருகை தர முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்து தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக காண நேரடி ஒளிபரப்பும் செய்யபடவுள்ளது.
20,000 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம் – Amazon வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
அத்துடன் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகளும் தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது. இந்த கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நாளை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் டிச.10 (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.