10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22 வரை விடுமுறை – சுகாதாரத்துறை நடவடிக்கை!!
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு அடுத்த திங்கட்கிழமை (மார்ச் 22) வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 மாதங்களுக்கு பின்னர் ஜனவரி 19 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. அரசு வழங்கிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்ட போதிலும், வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3 முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது.
அரசு & கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் சுமார் 3,500 மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கு 10ம் வகுப்பிற்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான தகவலின் பேரில் பள்ளிக்கு விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். மேலும் அந்த பள்ளியில் பணியாற்றும் பிற ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதுமட்டுமின்றி கொரோனா தொற்று உறுதியான 10ம் வகுப்பு ஆசிரியரின் வகுப்பில் பயிலும் மாணவிகள் 80 பேருக்கு வரும் திங்கட்கிழமை (மார்ச் 22 வரை) விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பிற மாணவிகளுக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.