அரையாண்டு தேர்வும் ரத்தா ?? – விரைவில் அரசு அறிவிப்பு !

0
அரையாண்டும் தேர்வும் ரத்தா - விரைவில் அரசு அறிவிப்பு
அரையாண்டும் தேர்வும் ரத்தா - விரைவில் அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வும் ரத்தா ?? – விரைவில் அரசு அறிவிப்பு !

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் பள்ளி அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே காலாண்டு தேர்வு ரத்ததான நிலையில் அரையாண்டு தேர்வும் ரத்தாவதாக கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் பாடங்கள் !

கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. பள்ளிகள் மூடப்பட்டதால் தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. தொற்றின் தீவிரம் குறையாததினால் மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

அடுத்த கல்வி ஆண்டும் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்படுகிறது. மேலும் சிலப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் கூட நடைபெற்றது. மத்திய அரசு ஊரடங்கு தளர்வு அறிவித்தும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

பாடத்திட்டம் குறைப்பு :

இதற்கிடையில் தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பிற்கான ஆலோசனையும் நடைபெற்றது. முதலில் 30% குறைக்கப்பட பாடங்கள் அதன் பின்னர் 40 % வரை குறைக்கப்பட்டது. இன்னும் பள்ளிகள் திறக்கப்படத்தினால் மேலும் பாடங்களை குறிப்பிட்ட அவகாசத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு :

தற்போதைய சூழலை பொறுத்த வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார், எனவே ஏற்கனவே காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டதனை போல் இந்த அரையாண்டு தேர்வும் ரத்தாகிவிடும் என்றே தெரிகிறது. இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் அமைச்சர் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பினை வெளியிடுவார் என தெரிகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!