தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகளை நடத்தி மதிப்பெண்களை வழங்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட்டது. பின்னர் தொற்று பாதிப்பு குறைந்த காரணத்தால் கல்வி நிறுவனங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. தற்போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?? அரசு தீவிர ஆலோனை!!
9, 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 11ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை மற்றும் மதிப்பெண்கள் மதிப்பீடு எதன் அடிப்படையில் நடைபெறும் என்கிற குழப்பம் அனைவர் மத்தியிலும் எழுந்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதன்படி 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகளை நடத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தி உள்ள பள்ளிக்கல்வித்துறை, ஏப்ரல் 15ம் தேதி செய்முறை தேர்வுகளை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வினை போன்று குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாத்தாள்களை தயாரிக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்