தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – தேர்வுத்துறை அறிவிப்பு வெளியானது
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாத 3வது வாரத்தில் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. மேலும் இம்மாத இறுதியில் தேர்வுக்கால அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போட்டி தேர்வுகள் நடப்பது எப்போது | TNPSC தேர்வுகள் நிலைமை என்ன
பத்தாம் வகுப்பு தேர்வுகள்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 27ம் தேதி தொடங்கி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருந்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைய தொடங்கியதால் தேர்வுகளை ஒத்திவைக்க பலதரப்பிலும் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனால் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவின் தாக்கம் குறையவில்லை
இதனால் தேர்வுகளை ரத்து செய்ய பலர் வலியுறுத்திய நிலையில், 10ம் வகுப்பு மதிப்பெண்கள் எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்க மிக முக்கியமானது என்பதால் கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவும் மே 17 வரை நீட்டிக்கப்பட்டு விட்டது. தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி ஜூன் 3வது வாரத்தில் நடைபெறும் என்றும் ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒருநாள் விடுமுறை விடப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |