தமிழக அரசு பள்ளி கல்வித்துறை ஆனது 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினை நடத்த இருப்பதாக அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதில் மாணவர்களுள்க்கு தேர்வு மையமானது அருகில் உள்ள பள்ளிகளில் அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு விமர்சனங்களை எழுந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையம் ஏற்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 100 தேர்வு கட்டணமாகவும் , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 200 தேர்வு கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் மதிப்பீடு நடைபெறுவதற்கான மையங்களும் அந்தந்த பள்ளிகளிலேயே அல்லது அருகாமையில் உள்ள பள்ளிகளில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அறிவிப்புகளை அதன் தகவல்களையும் உடனே பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்