மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தபாலில் அனுப்ப கல்வித்துறை முடிவு ???

1
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தபாலில் அனுப்ப கல்வித்துறை முடிவு
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தபாலில் அனுப்ப கல்வித்துறை முடிவு

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தபாலில் அனுப்ப கல்வித்துறை முடிவு ???

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் என மூடப்பட்டிருந்தது.

இதனால் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு தேர்ச்சி ஆனது மாற்று வழியில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் அடுத்த கல்வியாண்டு தொடங்கப்படுவது இன்னும் தாமதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது.

அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இருப்பதனால் அவர்களுக்கான பாடப்புத்தகங்களை வழங்கிட ஆலோசிக்கப்படுகிறது. அதாவது ஆன்லைன் மூலம் கல்வி கற்றாலும் மாணவர்களுக்கு கையில் புத்தகம் இருப்பது கூடுதல் அனுகூலம் மற்றும் அத்தியாவசியமும் கூட. இதனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மேலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தபாலில் வழங்க ஆலோசிக்கப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!