தமிழகத்தில் 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் – நாளை முதல் பள்ளிகளில் விநியோகம்!
தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அசல் தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. நாளை நாமக்கல் மாவட்டத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. நாளை நாமக்கல் மாவட்டத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலினால் கடந்த ஆண்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்வில்லா தேர்ச்சி அளிக்கப்பட்டது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தான் மதிப்பெண்களும் வழங்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டிற்கு அனுப்பப்பட்டனர். வைரஸின் தாக்கம் சற்று தனிந்த பின் மீண்டும் இந்த வருட துவக்கத்தில் ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
அக்.4 முதல் 7 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!
4 மாத காலங்களில் பாடங்கள் நடத்தப்பட்டதன் அடிப்படையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஆனால் அதற்குள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவியதால் தேர்வுகள் இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்பட்டது. தொற்றின் தாக்கம் குறைந்ததினால் மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (அக்.4) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
முன்னதாக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் தற்போது வழங்கப்படவுள்ளது. அதற்கான சான்றிதழ்கள் பண்டலை மாவட்ட கல்வி அலுவலர் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். அதனால் நாளை முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அதற்கான அறிவிப்பினை பள்ளிகள் தோறும் ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர்.