10 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரு மாதங்கள் தள்ளி வைக்க திட்டம் ?!

0
10 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரு மாதங்கள் தள்ளி வைக்க திட்டம்
10 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரு மாதங்கள் தள்ளி வைக்க திட்டம்

10 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரு மாதங்கள் தள்ளி வைக்க திட்டம் ?!

தமிழக பாட திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை இரண்டு மாதங்கள் தள்ளிவைக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வை நடத்த முடியாமல் போனது. மேலும் இந்த புதிய கல்வி ஆண்டிலும் இன்னும் பள்ளிகள், கல்லுாரிகளை திறக்க முடியவில்லை. இதனால் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான வகுப்புகள் தாமதமாகியுள்ள நிலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் பாடங்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் மட்டும் பருவ இடைத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகள் அவை நடத்தப்படவில்லை. இந்நிலையில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது. உயர்நிலை படிப்புகளான இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பிளஸ் 2 பாடங்களே அடிப்படை என்பதால் மாணவர்கள் கட்டாயம் இந்த பாடங்களை படித்தாக வேண்டும்

எனவே பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க கூடுதல் அவகாசம் தேவை என்பதனால் இதன் காரணமாக 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை மார்ச் மாதத்திற்கு பதில் மே மாத கடைசி அல்லது ஜூனுக்கு தள்ளி வைக்கலாமா என பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இது குறித்து நிபுணர் குழு அமைத்து விரிவாக ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!