தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!

0
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!

தமிழக பேருந்து நிலையங்களில் ஒரு மாற்றுத்திறனாளி நின்றிருந்தாலும் பேருந்தை நிறுத்தி அவரை ஏற்றிச் செல்ல வேண்டும் என மேலாண் இயக்குநர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மக்களுக்கு தேவையான பல்வேறு நல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த திட்டம் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. மேலும் பெண்கள் மத்தியில் இந்த திட்டம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி (DA) உயர்வு – அரசு சூப்பர் அறிவிப்பு!

இந்த நிலையில் பேருந்துகளில் முறைகேடுகளை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு புதிதாக 4000 பேருந்துகளை வாங்க திட்டமிட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2016 ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அரசு புதிய பேருந்து வாங்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேசிய திறனாய்வு தேர்வு! விண்ணப்பிப்பது எப்படி?

இதில் 10 % பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய கூடிய வசதிகளை கொண்டிருக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. மேலும் மாற்று திறனாளிகள் மற்றும் அவரின் உதவியாளர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாற்றுத்திறனாளி நின்றிருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் என மேலாண் இயக்குநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து வகை மாற்றுதிறனாளிகளையும் பாகுபாடின்றி, பேருந்துகளில் 75% பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!