தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கென மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை
பணியின் பெயர் வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட இயக்க மேலாண்மை காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கென மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • MS Office- ல் 3 முதல் 6 மாத கால படித்து தேர்ந்த சான்றிதழ் கொண்டவராக இருக்க வேண்டும்.
மாவட்ட இயக்க மேலாண்மை வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NLC நிறுவனத்தில் ரூ.7.80 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

Follow our Instagram for more Latest Updates

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட இயக்க மேலாண்மை தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!