தமிழகத்தில் புது பொலிவு பெறும் ரேஷன் கடைகள் – அதிகாரி வெளியிட்ட சூப்பரான தகவல்!!
தமிழகத்தில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகள் புதுப்பொலிவுடன் மாற்றமடைந்து வருகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகள்
தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு கொண்டிருக்கிறன. தற்போது ரேஷன் கடையில் பல்வேறு வகையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரேஷன் கடையின் கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் கடையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
WhatsApp: வீடியோ காலில் Picture-in-Picture அம்சம் – விரைவில் வர இருக்கும் சூப்பர் அப்டேட்!!
அதாவது ரேஷன் கடைகளில் கேமராக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பாதை, வாடிக்கையாளர்கள் அமர்வதற்குரிய இடங்கள், கழிப்பிடம், மழைநீர் சேகரிப்பு ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கூட்டுறவு துறை அதிகாரி கூறியதாவது, சேலம் மாவட்டத்தில் இதுவரை 100 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இந்த ரேஷன் கடைகளில் முகப்புகளில் பிராதன சின்னங்கள், திருவள்ளுவர் படம் ஆகியவை வரையப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் தரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதேபோன்று தமிழக முழுவதும் உள்ள 2895 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.