தமிழக ரேஷன் கடைகளில் வழக்கமாக வாங்கும் பொருட்களுக்கு டோக்கன் – அதிகாரி விளக்கம்!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழக்கமாக வாங்கும் பொருட்களை மக்கள் டோக்கன்களை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம் என மாவட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் பிறகு நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிப்பிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் முறையில் பொருட்கள் :
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். பலர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். இதனால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் அரிசி அட்டைதாரர்களுக்கு மூலம் ரூபாய் 4000 இரு தவணைகளாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு குறித்த இறுதி முடிவு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!
அதன் படி மே மாதத்தில் முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டது. ஜூன் மாதத்திற்கான தொகையும் வழங்கப்படவுள்ளது. ரேஷன் கடையில் கூட்டம் சேர்வதை தவிர்க்கும் வகையில், டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள டோக்கனை பயன்படுத்தி, வழக்கமான ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம் என மாவட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசு கொரோனா நிவாரண உதவித்தொகை இரண்டாவது தவணை 2,000 ரூபாய் பிறகு வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
அத்துடன் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு மேலும் மத்திய அரசின் ஒரு நபருக்கு, ஐந்து கிலோ வீதம் கூடுதல் அரிசி போன்றவைகள் சேர்த்து வழங்கப்படும். கடந்த ஒரு வாரமாக, ரேஷன் பணியாளர்கள் டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர். விரைவில் 2,000 ரூபாயும், மளிகை பொருளும் கிடைக்குமென மக்கள் காத்திருக்கின்றனர். ரேஷன் கடைகளில், மக்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்கும் வகையில், டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவை வழக்கமாக வாங்கும் பொருட்களுக்கான டோக்கன் மட்டுமே என்று மாவட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏண்டா மாத்தி மாத்தி பேசுறீங்க