தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிக்கல் – ரேஷன் அட்டைதாரர்கள் ஷாக்!
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான துணிப்பை இல்லாததால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு:
தமிழகத்தில் தை திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த வகையில் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 4ம் தேதி முதல் ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி, ஏலக்காய் 10 கிராம், திராட்சை தலா 50 கிராம், பாசி பருப்பு அரை கிலோ, ரவை ஒரு கிலோ, மல்லி தூள், நெய், கடுகு, சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், உளுத்தம் பருப்பு, அரை கிலோ, கடலை பருப்பு 250 கிராம், கோதுமை ஒரு கிலோ, புளி 250 கிராம், உப்பு ஒரு கிலோ, முழு கரும்பு ஆகிய 21 வகையான பொருட்கள் பாதுகாப்பாக பைகளில் பேக்கிங் செய்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 31 வரை 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை – கொரோனா பரவல் எதிரொலி!
இந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த 4ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான துணிப்பைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் பரிசு பொருள் வாங்க வந்த ரேஷன் அட்டைதாரர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை – ஜாக்பாட் அறிவிப்பு!
இதனால் ரேஷன் கடை ஊழியர்களிடம் பொதுமக்கள் ஆங்காங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 419 அரிசி ரேஷன் கார்டுதாரர்கள், அகதிகள் முகாம்களை சேர்ந்த 428 ரேஷன் கார்டுதாரர்கள் என மொத்தம் 7 லட்சத்து 61 ஆயிரத்து 847 பேர் பரிசு தொகுப்பு பெற தகுதியானவர்கள் உள்ளனர். தற்போது பொங்கல் தொகுப்பு வழங்க 100 சதவீதம் பொருட்கள் வந்துள்ளன. ஆனால் அதை வழங்க துணிப்பை 3 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே வந்துள்ளது. இந்த வகையில் துணிப்பை இருந்த வரை பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு விட்டது மற்றும் துணிப்பை மீண்டும் வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் சிலர் கூறினர்.