தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – கைரேகை சரிபார்க்காமலே பொருட்கள் வாங்கலாம்!
பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது கைரேகை இயந்திரம் சரியாக வேலை செய்யாததால் கைரேகை சரி பார்க்காமலேயே ரேஷன் பொருட்கள் வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் பொருட்கள்
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு முதலான அன்றாட தேவை பொருட்கள் அனைத்தையும் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். அனைத்து ஏழை எளிய மக்களும் சமமாக மலிவு விலை ரேஷன் பொருட்களை வாங்கி பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தல் என்கிற திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த கைரேகை வைப்பதில் பல சிக்கல்கள் இருந்து வருகிறது. பலரின் கைரேகை அந்த இயந்திரத்தில் பதியாததால் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையோர் கவனத்திற்கு – இன்று முதல் வழங்கல்!
தமிழகத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலுமே இத்தகைய பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இது தொடர்புடைய நிறுவனமான (இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின்) – (Unique Identification Authority of India – UIDAI) உயர் நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறது. இதனால் இணைய இணைப்பு / தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும் கால கட்டத்தில் கைரேகை சரிபார்க்கப்படாமலேயே அனைத்து மலிவு பொருட்களும் மக்களுக்கு வழங்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!
இது மட்டுமல்லாமல் அனைத்து ஏழை எளிய மக்களும் அவர்களின் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பெற தகுதியுள்ள பொருட்கள் அனைத்தையும் பெற்றுவிட்டார்களா மற்றும் முறையாக அனைவருக்கும் அத்தியாவசிய பண்டங்களான அரிசி, பருப்பு, எண்ணெய் முதலானவை விநியோகிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.