தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கல்!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கவுள்ள நிலையில் அதற்கான பணிகள் அனைத்தும் விரைவாக நடைபெற வேண்டும் என்று நுகர்பொருள் வாணிப கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரம் காரணமாக தமிழக அரசு கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகள் மூலம் ரூ.4000 (ரூ.2000+ரூ.2000) மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் ‘அப்துல் கலாம் விருது’ விண்ணப்பங்கள் வரவேற்பு – அரசு அறிவிப்பு!!
தற்போது அதற்கான முதல் தவணை கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வருகிற ஜூன் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அதற்கான டோக்கன்கள் ஜூன் 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணத்தால் மளிகை பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது இது குறித்து தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மளிகை பொருட்கள் தொகுப்பில் உள்ள அனைத்து பொருட்களையும் ரேஷன் கடைகளுக்கு விரைந்து அனுப்ப வேண்டும் என்றும் இதற்காக அனைத்து மண்டலங்களில் செயல்படும் சேமிப்பு கிடங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு தேவைப்படும் ஊழியர்கள், சுமை தூக்கும் ஊழியர்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு எவ்வித தடங்கலும் இன்றி பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.