தமிழகத்தில் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – இணையதளம் மீண்டும் இயக்கம்!
தமிழகத்தில் ரேஷன் அட்டை குறித்து மாற்றங்கள் செய்ய அரசின் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இணையதள பராமரிப்பு காரணமாக ஓரிரு நாட்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது.
ரேஷன் இணையதளம்:
தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், கிராமப்புறங்களிலும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அரசின் நலத்திட்டங்களை பெற ரேஷன் அட்டை அனைத்து குடும்பத்திற்கும் முக்கிய ஆவணமாக உள்ளது. மேலும் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலமாகவும் புலம்பெயர் ஏழை, எளிய தொழிலாளர்கள் பலன் அடைகின்றனர்.
டெல்டாவை தொடர்ந்து வேகமாக பரவும் ‘லாம்ப்டா’ வைரஸ் – சுகாதாரத்துறை விளக்கம்!
இந்நிலையில் அத்தகைய முக்கியமான ஆவணம் பெற பலர் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் கொரோனா நிவாரணம் ரூ.4000 மற்றும் 14 பொருள்கள் அடங்கிய இலவச மளிகை பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும் குடும்ப தலைவி புகைப்படம் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற தகவலை அடுத்து, புதிதாக விண்ணப்பிப்பவர்கள், மேலும் ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
வழக்கமாக ரேஷன் இணையதளமான tnpds.gov.in என்பது மூலமாக அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிப்பார்கள். ஆனால் கொரோனா நிவாரண பணி காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதனை வழங்கும் பணியை ஆரம்பிக்க அரசு உத்தரவிட்டது. இதனிடையே தமிழக ரேஷன் வெப்சைட் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக முடக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த இணையதளம் இயங்க தொடங்கி உள்ளது. ரேஷன் கார்டுகள் தொடர்பான எந்த மாற்றத்தையும் இந்த இணையதளத்தின் வாயிலாக செய்யலாம்.