தமிழகத்தில் 13 மளிகைப் பொருட்கள் & ரூ.2000 விநியோகம் – முதல்வர் நாளை துவக்கி வைப்பு!

1
தமிழகத்தில் 13 மளிகைப் பொருட்கள் & ரூ.2000 விநியோகம் - முதல்வர் நாளை துவக்கி வைப்பு!
தமிழகத்தில் 13 மளிகைப் பொருட்கள் & ரூ.2000 விநியோகம் - முதல்வர் நாளை துவக்கி வைப்பு!
தமிழகத்தில் 13 மளிகைப் பொருட்கள் & ரூ.2000 விநியோகம் – முதல்வர் நாளை துவக்கி வைப்பு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் 13 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் 2வது தவணை ரூ.2000 வழங்கும் பணியை முதல்வர் நாளை (ஜூன் 3) தொடங்கி வைக்க உள்ளார்.

இலவச மளிகைப் பொருள்கள்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் அரசு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக முழு ஊரடங்கை கடந்த மாதம் முதல் அமல்படுத்தியது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வராமல் வீடுகளுக்கே சென்று காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 6 வரை பணிக்கு வர விலக்கு!

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 7 வரை நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அரசு அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2000 முதலில் மே மாதம் வழங்கியது. மேலும் ரூ.2000 ஜூன் மாதம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க 13 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள்? மருத்துவர்கள் கருத்து!!

தமிழகத்தில் உள்ள 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ கோதுமை மாவு, உப்பு, ரவை, அரை கிலோ சர்க்கரை, உளுத்தம் பருப்பு, 250 கிராம் புளி, கடலை பருப்பு, 100 கிராம் கடுகு, சீரகம், மஞ்சள் துாள், மிளகாய் துாள்; டீ துாள், ஒரு குளியல் சோப்பு, ஒரு துணி துவைக்கும் சோப்பு ஆகியவை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அந்த பொருள்கள் வழங்கும் பணியை முதல்வர் முக. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இந்த தொகுப்புகளை பெற டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. நாளை திரு.கருணாநிதி பிறந்தநாள் என்பதால் முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து மக்களுக்கு ஜூன் 5 முதல் இந்த பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதத்திற்கான கொரோனா நிவாரணம் ரூ.2000 வழங்கும் திட்டமும், நாளை துவக்கி வைக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!