தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பொங்கல் பாண்டிகை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வரும் ஜன.3ம் தேதி முதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் வழங்கும் திட்டம் கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு சில ஆண்டுகளாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்போது சுமார் 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் அறிவிப்பு!
இந்நிலையில் தற்போது ஆட்சியை பிடித்துள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பு இந்த ஆண்டும் வழங்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அந்த வகையில் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், வெல்லம், துணிப்பை மற்றும் முழுகரும்பு உள்ளிட்ட 21 பொருட்களுடன் சேர்த்து பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டிச.20 முதல் ஜன.7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பானது தமிழகத்தில் உள்ள 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 ரேஷன் அட்டைதார குடும்பங்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் அனைவருக்கும் ரூ.1,088 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முழுகரும்பு ரூ.71 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. இத்தகைய பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மேலும் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.