தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 & மளிகை பொருட்கள் – கால அவகாசம் நிறைவு!
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிதியுதவி மற்றும் மளிகை பொருட்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இதற்கான கால அவகாசம் நிறைவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்த கொரோனா நிவாரணம் ரூ.4000 மற்றும் இலவச மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினார். மாநிலத்தில் உள்ள மொத்தம் 2.09 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டது. ரூ.4000 நிதியுதவி 2 தவணைகளாக வழங்கப்படும் என அறிவிப்பட்டது. அதன்படி முதல் தவணை ரூ.2000 மே மாதம் வழங்கப்பட்டது. 2வது தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் ஜூன் மாதம் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – துறைத் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு!
கொரோனா அச்சம், நோய்த்தொற்று பாதிப்பினால் தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவற்றின் காரணமாக சிலரால் நிவாரண உதவிகளை பெற முடியவில்லை. எனவே அவர்களும் நிவாரண உதவிகளை பெறும் வகையில் கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது வரை 99 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு பேருக்கு கொரோனா நிவாரணம் வழங்ப்பட்டு விட்டது. இந்நிலையில் கொரோனா நிவாரணம் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை ‘இந்த’ மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
இதனால் இனி கொரோனா நிவாரண நிதியுதவி மற்றும் பொருட்களை ரேஷன் கடைகளில் பெற முடியாது. எனவே மீதமுள்ள மளிகை தொகுப்பு பொருட்கள் மற்றும் நிவாரண தொகையை மாவட்ட வழங்கல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உணவு வழங்கல் துறை ஆணையர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.