தமிழகத்தில் நாளை (நவ. 20) முதல் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் நாளை (நவ. 20) முதல் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை (நவ. 20) முதல் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை (நவ. 20) முதல் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் சற்று மழை குறைந்துள்ள நிலையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வு எழுத இருப்போர் கவனத்திற்கு – தேர்வுக்கான விதிமுறைகள் இதோ!

Exams Daily Mobile App Download

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி 3 நாட்களுக்கு நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நவம்பர் 20,21,22 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரங்களில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக பல பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தாங்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!