தமிழகத்தில் பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது? – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என பள்ளி கல்வி துறை தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள்:
2022- 23 கல்வியாண்டிற்கான பொது தேர்வு அட்டவணைகளை நவம்பர் மாதம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன் படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என்றும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
காஷ்மீர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு – கடும் பனி பொழிவின் எதிரொலி!
Follow our Instagram for more Latest Updates
மார்ச் 13ல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற உள்ள பொது தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுத்தவுள்ளனர். அவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும்.மே 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த தேர்வானது ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் எழுதவுள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த தேர்வை 8.50 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
Exams Daily Mobile App Download