தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு ரத்து – இடைநிற்றல் அதிகரிக்கும் என அச்சம்!!
தமிழக அரசு 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு வரும் எண்ணிக்கை குறையும் என்றும் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் மிகவும் தாமதமாக ஜனவரி மாதத்தில் திறக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மேலும் நடப்பு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் பொதுத்தேர்வுகள் குறித்து பல்வேறு கேள்விகள் மக்களிடையே எழுந்தது. இந்நிலையில் கடந்த வாரம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (CTET) முடிவுகள் வெளியீடு – தேர்ச்சி சதவீதம் குறைவு!!
முதல்வரின் அறிவிப்பு:
மற்ற வகுப்புகளுக்கான தேர்வு நாட்கள் குறித்து தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்த நிலையில் தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் நேற்று அறிவித்தார். இதனால் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அடுத்த வகுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அரசின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் குடும்ப வறுமை காரணமாக கூலி வேலைக்கு செல்ல தொடங்கி விட்டனர். இதனால் அவர்கள் பள்ளிக்கு வரும் சூழல் பிடிக்காமல் போய்விடும். பொதுத்தேர்வு குறித்து பயம் இருந்த காரணத்தால் பள்ளிக்கு மீண்டும் மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். பொதுத்தேர்வு ரத்து என அறிவித்துள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறையவும், இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Please do all pass because a short period of time.