தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வி இயக்ககம் அறிவிப்பு!!
தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி பணிகள் காரணமாகவோ பேராசிரியர்கள் கல்லூரிக்கு வருவதற்கு தடை விதித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமடைந்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த சூழலில் சில தனியார் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்காக ஆசிரியர்கள் கல்லூரிக்கு வரும்படி நிர்வாகம் அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
தற்போதுள்ள கொரோனா சூழலில் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வரும்படி நிர்பந்திக்கப்படுவதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்காகவோ, எந்தவித காரணமாகவோ பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர அனுமதி இல்லை என கூறி கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணிக்கான போட்டித்தேர்வுகள் – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் துவக்கம்!!
அதன்படி அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாகிகளுக்கும் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அளித்துள்ள சுற்றறிக்கையில், ‘மாநிலம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் பேராசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். NAAC மற்றும் கல்லூரி சார்ந்த பணிகள் தொடர்பாக எந்தவொரு ஆசிரியர்களும் கல்லூரிகளுக்கு வர அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.