10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு – தனியார் பள்ளிகள் திட்டம்
தமிழக அரசு 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்ட காரணத்தால் 11ம் வகுப்பு சேர்க்கைக்கு உதவியாக இருக்கும் வகையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை மே 3ம் தேதி நடத்த இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் 10, 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று அறிவிக்கப்பட்டது. தீடீரென்று தமிழக முதல்வர் சட்டசபையில் 9, 10, 11 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.
அரசு வேலைவாய்ப்பில் சலுகை – தமிழ் வழி படிப்பில் அதிகளவில் சேரும் மாணவர்கள்!!
மக்களின் கருத்து:
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியும், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் எதிப்பும் கிளம்பியது. இந்த வருடம் 11ம் வகுப்பில் உள்ளவர்கள் போன வருடம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை சந்திக்காதவர்கள். இதேபோல் இந்த வருடமும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்தால் அடுத்த வருடம் அந்த மாணவர்கள் புதிதாக 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை சந்திக்க நேரிடும்.
இதனால் மாணவர்கள் சிரமப்பட நேரிடும். அதனால் பொதுத்தேர்வுகள் ரத்து என அறிவிக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திறனறிவு தேர்வு:
சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 350க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறிவு தேர்வுகளை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தேர்வின் மதிபெண்களை வைத்து 10ம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்புக்கான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Its useful information given us